×

சென்னை தொழிலதிபரை கடத்தி ரூ.2 கோடி பறிமுதல் செய்த வழக்கில் கும்பல் தலைவன் தவ்பீக்கின் மனைவி கைது

திருச்சி: தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தை சேர்ந்தவர் தவ்பீக் (40). இவர் மீது மும்பை, கோவை குண்டு வெடிப்பு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர், வங்கதேசத்துக்கு சென்று தலைமறைவானார். அங்கு சல்மா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர், மனைவி, 2 குழந்தைகளுடன் கொல்கத்தா வழியாக சென்னைக்கு அழைத்து வந்து சட்டவிரோதமாக சூளைமேட்டில் குடியேறினார். இந்நிலையில் தவ்பீக், அவரது நண்பர்களான உமாமகேஸ்வரன், ராஜா உள்ளிட்ட 6 பேருடன் இணைந்து மண்ணடியை சேர்ந்த தொழில் அதிபர் திவான்அக்பரை கடந்த 17ம் தேதி கடத்தி சென்று ரூ.2 கோடி மிரட்டி வாங்கினார். இதுகுறித்து முத்தியால்பேட்டை போலீசார், 6 பேரை கைது செய்தனர்.தற்போது, திருச்சியில் தவ்பீக் மனைவி சல்மாவையும், கோவையில் தவ்பீக்கின் முக்கிய கூட்டாளிகளான சென்னையை சேர்ந்த அப்துல்காதர் (46), சிக்கந்தர் (35) ஆகியோரையும் நேற்று சென்னை தனிப் படை போலீசார் கைது செய்தனர்.


Tags : Thavbeek ,Chennai , Chennai: Businessman abducted, Rs 2 crore seized, gang leader Thavbeek's wife arrested
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...