×

மெக்கானிக் தூக்கிட்டு தற்கொலை

திருமுல்லைவாயல்: ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், இந்திரா நகர், 2-வது தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (27). இவர், இரு சக்கர வாகன மெக்கானிக். வேலை இல்லாததால் மனமுடைந்து காணப்பட்டார். இதற்கிடையில், நேற்று முன்தினம் கார்த்திக் பெற்றோர் வீட்டிலிருந்து வெளியே சென்று விட்டனர். அவர் மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். மீண்டும் பெற்றோர் இரவு வீடு திரும்பியுள்ளனர். அப்போது, கார்த்திக் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருந்தார். இதை பார்த்த அவர்கள் கதறி அழுதனர். தகவலறிந்து, திருமுல்லைவாயல் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Tags : suicide , Mechanic, hanging, suicide
× RELATED தெலங்கானாவில் மேலும் 2 விவசாயிகள் தற்கொலை