×

லண்டனில் இருந்து சென்னை திரும்பியவர் கொரோனா தனிமை வார்டில் பெண் தற்கொலை: மீனம்பாக்கத்தில் பரபரப்பு

சென்னை: கோயம்புத்தூரை சேர்ந்த மணிமேகலை (47) என்பவர், லண்டனில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றிருந்தார். கொரோனா ஊரடங்கால் சென்னை திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில், மீட்பு சிறப்பு விமானம் மூலம் கடந்த மாதம் 24ம் தேதி லண்டனிலிருந்து சென்னை வந்தடைந்தார். அங்கு, பரிசோதனைக்கு பிறகு மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இந்நிலையில், நேற்று காலை இவருக்கு உணவு கொடுப்பதற்காக ஊழியர்கள் அறை கதவை தட்டினர்.

ஆனால், நீண்ட நேரமாகியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மணிமேகலை தூக்கில் தொங்குவது தெரிந்தது. உடனடியாக அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். தகவலறிந்து வந்த பரங்கிமலை போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிந்து தனிமையின் காரணமாக தூக்கில் தொங்கினாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Corona ,suicide ,Chennai ,loneliness ward woman ,London Corona ,London , Returned to Chennai, London, Corona, Loneliness Ward, Female Suicide, Meenambakkam
× RELATED கொரோனாவால் 4 ஆண்டு நிறுத்தப்பட்ட...