சென்னை: திமுக முப்பெரும் விழாவில் விருது பெறுவோர் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, திமுக தலைமை கழகம் வெளியிட்ட அறிவிப்பு: சென்னை கலைஞர் அரங்கில் செப்டம்பர் 15ம் தேதி திமுக முப்பெரும் விழா நடக்கிறது. இந்த விழாவினையொட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகிற விருதுகளான பெரியார் விருது-மா.மீனாட்சிசுந்தரம், அண்ணா விருது-முனைவர் அ.ராமசாமி. கலைஞர் விருது- எஸ்.என்.எம்.உபயதுல்லா, பாவேந்தர் விருது- அ.தமிழரசி, பேராசிரியர் விருது-சுப.ராஜகோபாலுக்கும் வழங்கப்படும்.இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.