×

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என அறிவிப்பு

சென்னை: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தை செப்டம்பர் 28ம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வணிகர் சங்கங்களுடனான ஆலோசனைக்கு பிறகு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

செப்டம்பர் 18ம் தேதி மொத்த உணவு தானிய கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சந்தை திறப்பு குறித்து துணை முதல்வர் ஓ.பி.எஸ் இன்று வணிகர் சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. புதிய கட்டுப்பாடுகளுடன் கோயம்பேடு காய்கறி சந்தை திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது.

வணிக ரீதியாக ஒரு நகரத்துக்கு சென்றுவிட்டு 72 மணி நேரத்தில் திரும்புவோர் தனிமைப்படுத்த தேவையில்லை என்று தனிமைப்படுத்தலில் புதிய தளர்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.

கொரோனா பரவல் ஆரம்பத்திலிருந்தே சென்னையில் அதிகரித்த வண்ணமாக உள்ளது. தொற்று பரவல் அதிகரித்ததற்கு காரணம் கோயம்பேடு காய்கறி சந்தைதான் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் சந்தை உடனடியாக மூடப்பட்டது. பின்னர் திருமழிசைக்கு காய்கறி சந்தை மாற்றப்பட்டது.

மொத்த வியாபாரிகளுக்கு மட்டுமே திருமழிசையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு சந்தையில் மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை நடைபெற்றது. வியாபாரிகள் மட்டுமல்லாமல் பொது மக்களும் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மாநகருக்கு வெளியே அமைந்துள்ள்ள திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையில் அதற்கு வழி இல்லை.

இதனால் காய்கறிகள், பழங்கள் விற்பனை குறைந்து டன் கணக்கில் வீணாகிவருகின்றன. கொரோனா பொது முடக்கத்தால் அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தை இடமாற்றத்தால் வியாபாரிகள் பெரியளவில் நஷ்டம் அடைந்து வருகின்றனர்.



Tags : Chennai ,Koyambedu Vegetable Market ,o.panneerselvam , Koyampedu, o.panneerselvam
× RELATED சென்னை பட்டாளத்தில் பெயிண்ட் கடையில்...