சென்னை: கோயம்பேடு சந்தையை திறக்க முதல்வர் ஒப்புதலுடன் இன்றிரவு தேதி அறிவிக்கப்படும் என்று விக்கிரமராஜா கூறியுள்ளார். தலைமைச் செயலகத்தில் துணை முதல்வர் ஓபிஎஸ் உடனான ஆலோசனைக்கு பிறகு விக்கிரமராஜா பேட்டியளித்துள்ளார். பழக்கடை, மொத்த வியாபாரம், மலர் சந்தையை திறப்பது பற்றி 10 நாட்களில் அறிவிப்பு வெளியாகும் என உறுதி அளித்துள்ளார்.