×

பாடல்களை கேட்டு தாளமிடுகிறார், எழுத முயற்சிக்கிறார்!: எஸ்.பி.பி உடல்நிலை குறித்து மகன் சரண் புதிய தகவல்..!!

சென்னை: பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் பாடல்களை கேட்டு தாளமிடுவதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் புதிய தகவலை வெளியிட்டுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், நினைவுடன் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், தனது தந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பாடல்களை கேட்டு தாளமிடுவதாகவும் அவரது மகன் எஸ்.பி.பி சரண் தெரிவித்துள்ளார். நான் மருத்துவமனைக்கு சென்று பார்த்த போது, எதையோ என்னிடம் தெரிவிப்பதற்காக எழுத முயன்றார். ஆனால் பேனாவை பிடித்து எழுத அவருக்கு சிரமமாக இருந்தது. தொடர்ந்து, இந்த வாரத்திற்குள் எழுத்து மூலம் என்னிடம் பேசுவார் என்று நம்புகிறேன். அவர் பாடல்களை கேட்கிறார்.

 அந்த பாடல்களை கேட்டு தாளமிடுகிறார். பாடவும் முயற்சிக்கிறார். இதெல்லாம் அவர் நலம் பெறுவதற்கான அறிகுறிகள். அவர் விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்று நம்புகிறேன் என்று எஸ்.பி.பி சரண் குறிப்பிட்டார். கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட எஸ்.பி. பாலசுப்ரமணியம் கடந்த 5ம் தேதி முதல் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உயிர்காக்கும் கருவி மற்றும் எக்மோ கருவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Tags : SP.BalaSubramaniyam ,Son Charan ,SBP ,SPB Charan , SPB Charan,SP.B,normal ,MGM hospital
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்