×

சென்னை பெண் டாக்டர் பலாத்கார புகார் லண்டனில் இருந்து திரும்பிய டாக்டர் சிக்கினார்: பெங்களூர் ஏர்போர்ட்டில் சேலம் போலீசார் மடக்கினர்

சேலம்: சென்னை டாக்டர் பலாத்கார வழக்கில் லண்டனில் இருந்து மதுரைக்கு வந்த டாக்டரை பெங்களூர் ஏர்போர்ட்டில் சேலம் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மதுரை வில்லாபுரத்தை சேர்ந்தவர் டாக்டர் அஸ்வின் (28). இவர் சேலத்தில் உள்ள தனியார் மருத்துவகல்லூரியில் முதுகலை படிப்பான ஆர்த்தோ (எலும்பு முறிவு) படித்து வந்தார். அப்போது சென்னையை சேர்ந்த பேகம் என்பவர் எம்பிபிஎஸ் படித்து வந்தார். இவர் கொண்டாலாம்பட்டி பகுதியில் தங்கியிருந்தார். அப்போது டாக்டர் அஸ்வினும், பேகமும் நட்பாக பழகினர். நாளடைவில் அவர்களுக்குள் காதல் மலர்ந்தது.

திருமணம் செய்வதாக கூறிய டாக்டர் அஸ்வின், எல்லை மீறியதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் படிப்பை முடித்துக்கொண்டு அஸ்வின் மதுரைக்கு சென்று விட்டார். “என்னை திருமணம் செய்வதாக கூறினீர்களே? திருமணத்தை எப்போது வைத்துக்கொள்ளலாம்’’ என பேகம் கேட்டுள்ளார். ஆனால் அவர் தட்டிக்கழித்து திருமணம் செய்து கொள்ள மறுத்துவிட்டார். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பேகம், சேலம் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேசனில் கடந்த 2019 செப்டம்பர் மாதம் புகார் கொடுத்தார். இதன் அடிப்படையில் டாக்டர் அஸ்வின் மீது பலாத்கார வழக்கு பதிவு செய்தனர்.

அவரது தந்தை மீதும் வழக்கு பாய்ந்தது. அஸ்வின் லண்டன் தப்பி சென்றுவிட்டார். இதையடுத்து அவரது தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் வழக்கில் இருந்து நீதிமன்றம் மூலம் விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 24ம் தேதி டாக்டர் அஸ்வின் லண்டனில் இருந்து இந்தியா புறப்பட்டார். இதுகுறித்த தகவல் உடனடியாக சேலம் மாநகர போலீசுக்கு கிடைத்தது. உடனடியாக இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் தலைமையிலான போலீசார், பெங்களூர் விமான நிலையத்தில் இறங்கியதும் அஸ்வினை கைது செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சங்ககிரி கிளைச்சிறையில் அடைத்தனர்.

Tags : woman doctor ,airport ,London ,Bangalore ,Chennai ,Doctor ,Salem , Chennai, Female Doctor, Rape Complaint, London, Doctor Chikinar, Bangalore Airport, Salem, Police Returned
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...