×

ஜவுளி குடோனில் கொள்ளை 5 பேர் கைது

புழல்: புழல் அடுத்த லட்சுமிபுரம், கல்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரபு (34). துணிக்கடை நடத்தி வருகிறார். கடைக்கு வரும் துணிகளை லட்சுமிபுரம் பெருமாள் கோவில் தெரு குடோனில் வைத்து அங்கிருந்து கடைக்கு எடுத்து செல்வது வழக்கம். கடந்த 18ம் தேதி குடோனில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள 331 பட்டுப்புடவைகள் கொள்ளைபோனது. இதுகுறித்து, புகாரின்பேரில், கடையில் ஏற்கனவே வேலை செய்த விக்னேஷ் (29), சந்திரசேகர் (20), அருண்குமார் (30), தாம்சன் (20), சக்திவேல் (29) ஆகியோரை கைது செய்தனர்.

Tags : robbery , In textile godown, robbery, 5 persons, arrested
× RELATED திண்டுக்கலில் பெட்ரோல் பங்க்...