×

திருமுல்லைவாயலில் கொரோனாவுக்கு 2 பேர் பலி

ஆவடி:ஆவடியை அடுத்த திருமுல்லைவாயல், பாரதி நகர் 3வது தெருவில் சுமார் 70வயது  மூதாட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மூதாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை உறவினர்கள் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும், அங்கு அவருக்கு பரிசோதனை செய்த போது கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. பின்னர், அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அதே போல, திருமுல்லைவாயல், யமுனா நகர், 2வது தெருவில் 70வயது மூதாட்டி மூதாட்டிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

அவரை உறவினர்கள்  கடந்த 10ந்தேதி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மூதாட்டி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். மேற்கண்ட இரு தொற்று இறப்பு குறித்து ஆவடி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் தலைமையில் ஊழியர்கள் மருத்துவமனைக்கு சென்ற இரு சடலங்களையும் மீட்டு உறவினர் முன்னிலையில் திருமுல்லைவாயல் எரிவாயு தகன மேடையில் நேற்று மாலை தகனம் செய்தனர். இதனை அடுத்து, ஆவடி மாநகராட்சியில் தொற்றுக்கு இது வரை 3087பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். மேலும், தொற்றால் 66பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Thirumullaivayal. 2 , Thirumullaivayal, Corona, 2, killed
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...