×

பஞ்சாயத்தில் வெடித்தது மோதல் 2 பேர் காதை கடித்து துப்பியதால் பரபரப்பு

வேடசந்தூர்:  திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே பாடியூர் இ.புதூரை சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன் (25). விவசாயி. இவரது உறவினர்கள்  பழனிவேல், வேல்முருகன். இருவருக்கும் நில பிரச்னை தொடர்பாக முன்விரோதம் உள்ளது. சிவசுப்பிரமணியன் இரு தரப்பினரையும் நேற்று அழைத்து  பஞ்சாயத்து பேசினார்.அப்போது சிவசுப்பிரமணியனுக்கும், வேல்முருகன் தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.  வாக்குவாதம் முற்றி இரு தரப்பினரும் சரமாரியாக தாக்கிக்  கொண்டனர். ஆத்திரமடைந்த சிவசுப்பிரமணியன், வேல்முருகன் தரப்பை சேர்ந்த மாரிமுத்து (62) என்பவரின்   இடது காதை கடித்து துப்பினார். இதில்  காதின் ஒரு பகுதி துண்டானது. ஆத்திரமடைந்த வேல்முருகன், ‘எங்க ஆளோட காதையே கடிச்சு துப்பிட்டியா. உன்னை என்ன பண்றேன் பாரு’ என்று  சிவசுப்பிரமணியனின் மீது பாய்ந்து, அவரது  காதை கடித்து கீழே துப்பினார். இதில் சிவசுப்பிரமணியன் காதும் துண்டானது.

அங்கிருந்த மக்கள் இருதரப்பையும் கட்டுப்படுத்தினர். காயமடைந்த மாரிமுத்து, சரவணன், மணிமேகலை, சுப்புலட்சுமி ஆகியோரை திண்டுக்கல் அரசு  மருத்துவமனையில் அனுமதித்தனர். பலத்த காயமடைந்த சிவசுப்பிரமணியன், மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருதரப்பினரும்  வடமதுரை காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். போலீசார் மாரிமுத்து, தங்கராஜ், வேல்முருகன், பழனிவேல், சிவசுப்பிரமணியன், வேலுமணி  உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நிலத்தகராறில் ஒருவருக்கொருவர் காதை கடித்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Conflict ,clash , clash, panchayat, 2 people , spat
× RELATED விருதுநகர் அருகே இருதரப்பினர் மோதலில் 9 பேர் மீது வழக்கு