×

பார்சிலோனா அணியிலிருந்து விலகல் ஏன்? அடுத்து எந்த அணியில் இணையப்போகிறார் மெஸ்ஸி?..ரசிகர்களை வாட்டி வதைக்கும் கேள்விகள்!

அர்ஜென்டினா: அர்ஜென்டினா நாட்டு கால்பந்து அணியின் கேப்டனான மெஸ்ஸி, பார்சிலோனா கிளப் அணிக்காகவும் விளையாடி வருகிறார். பார்சிலோனா அணி 10 முறை சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்றியதில் மெஸ்ஸியின் பங்கு முக்கியமானது. தற்போது நடைபெற்று வரும் சாம்பியன்ஸ் லீக் கோப்பைக்கான தொடரில் பார்சிலோனா அணி, பெய்ரன் முனிச் அணியுடன் மோதி 2-8 என்ற கோல்கணக்கில் படுதோல்வியை சந்தித்தது. அன்றிலிருந்தே பார்சிலோனாவில் இருந்து மெஸ்ஸி வெளியேறிவிடுவார் என்ற தகவல்கள் உலாவின. இந்நிலையில், அவர் உடனடியாக அணியில் இருந்து வெளியேற விருப்பம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து பார்சிலோனா அணி நிர்வாகத்திற்கு மெஸ்ஸி கடிதம் எழுதியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மெஸ்ஸியின் இந்த முடிவானது பார்சிலோனா அணி ரசிகர்களை கவலையடைச் செய்துள்ளது. இதற்கான காரணங்களை அவரே விரைவில் அறிவிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், கால்பந்து வீரர் மெஸ்ஸி, அடுத்து எந்த அணியில் இணையப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களை வாட்டி வருகிறது. இதனிடையே அவர் இங்கிலீஷ் கிளப்பான மான்செஸ்டர் சிட்டி அணியில் விளையாட விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், அதன் மேலாளருடன் கடந்த வாரமே ஆலோசித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


Tags : team ,Messi ,Barcelona ,fans , Barcelona team, Messi, football
× RELATED மகளிர் கிரிக்கெட்: வங்கதேச அணிக்கு...