சென்னை: தமிழகத்தில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சட்டப்பேரவை சபாநாயகர் நாளை விசாரணை நடத்த உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சபாநாயகர் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்ததை அடுத்து நாளை காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் விசாரணை மேற்கொள்வதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.