டெல்லி: வங்கிக்கடன் தொடர்பாக ஆர்.பி.ஐ. மீது பழியை போட்டுவிட்டு மத்திய அரசு தப்பித்துக்கொள்ளக்கூடாது என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. வங்கிக்கடன் விவகாரத்தில் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. ஊரடங்கின் போது மத்திய அரசால் தான் பிரச்சனை உருவானதாக உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.