×

மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் லட்சுமணன் மறைவுக்கு கே.பாலகிருஷ்ணன் இரங்கல்

சென்னை: மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:
கொரோனா தொற்று காரணமாக கட்சியின் மூத்த தலைவர் லட்சுமணன் உயிரிழந்தார். அவரது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்த லட்சுமணன் கால்நடைத்துறையில் சேர்ந்து அரசுப் பணியாற்றினார். அப்போது ஊழியர்களை அணிதிரட்டி படிப்படியாக எம்.ஆர்.அப்பனுடன் இணைந்து அரசு ஊழியர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தை உருவாக்குவதில் மாநிலம் முழுவதும் சென்று உழைத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஈர்க்கப்பட்டு, அரசுப் பணியை ராஜினாமா செய்து விட்டு கட்சியின் முழுநேர ஊழியராக தன்னை இணைத்துக் கொண்டவர். கட்சியின் அனைத்து பொறுப்புகளிலும் பன்முகத் தன்மையுடன் செயல்பட்டவர். அவரது மறைவு கட்சிக்கு பேரிழப்பு.

Tags : Lakshmanan ,death ,K. Balakrishnan ,Marxist , Marxist, senior leader Lakshmanan, demise, K. Balakrishnan condolences
× RELATED 2019ல் மொத்தமா வரும்போதே 39ல் வெற்றி;...