×

தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி பாஜவில் சேர்ந்தார் அண்ணாமலை

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி குப்புசாமி அண்ணாமலை பாஜ கட்சியில் இணைந்தார். தமிழகத்தை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை கர்நாடகாவில் பணியாற்றினார். இவர் கடந்த ஆண்டு திடீரென தனது பதவியை ராஜினாமா செய்து, மக்கள் நலப் பணிகளில் ஈடுபடத் தொடங்கினார். விரைவில் இவர் அரசியலில் நுழைய இருப்பதாக கர்நாடகா போலீஸ் துறையில் பேசப்பட்டு வந்த நிலையில், டெல்லியில் நேற்று பாஜ கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டார். பாஜ தலைமை அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சியில், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் உடனிருந்தார். பின்னர், பாஜ தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை சந்தித்து அண்ணாமலை வாழ்த்து பெற்றார். அவர் அளித்த பேட்டியில், ‘‘தமிழகத்தில் தேசிய உணர்வை வளர்க்கவும், பாஜவை வலுப்படுத்தவும் பணியாற்றுவேன்’’ என்றார்.

* பாரதிராஜாவா?
பாஜ.வில் சேர்ந்த பிறகு அண்ணாமலை அளித்த பேட்டியின்போது, ‘நானே விரும்பித் தான் பாஜ.வில் சேர்ந்துள்ளேன்,’  என்று கூறுவதற்கு பதில், ‘பாரதிராஜா கட்சியில் சேர்ந்துள்ளேன்,’ என்றார். இது, சமூக வலைதளங்களில் டிரெண்டாக வருகிறது. கட்சியில் சேர்ந்த முதல் நாளே கட்சியின் பெயரை தவறாக அவர் உச்சரித்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Annamalai ,IPS ,Bajaj ,Tamil Nadu , Tamil Nadu, former IPS officer, joined Bajaj, Annamalai
× RELATED தேர்தல் விதிகளை மீறியதாக கோவை தொகுதி...