×

கீழே கிடந்த பொருளை சாப்பிட்ட போது குண்டு வெடித்து பன்றி பலி ; உ.பி-யில் குழந்தை உட்பட 4 பேர் காயம்

கான்பூர், -உத்தரபிரதேசத்தில் கீழே கிடந்த பொருளை பன்றி சாப்பிட்ட போது, அந்த பொருள் வெடித்ததில் பன்றி பலியானது. மேலும் குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அடுத்த பாபு பூர்வா காவல் நிலைய பகுதியில் நேற்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். தகவலறிந்து சம்பவ இடத்தை அடைந்த போலீசார் மற்றும் எப்.எஸ்.எல் பிரிவு குழுவினர், நேற்றிரவு முதலல் தீவிர விசாரணையை மேற்கொண்டுள்ளனர். முதற்கட்ட விசாரணையில் குறிப்பிட்ட வீட்டிற்கு வெளியே கிடந்த பொருளை, அப்பகுதியில் சுற்றித்திரிந்த பன்றி சாப்பிட முயன்றுள்ளது. அப்போது அந்த பொருள் வெடித்து சிதறியது. இதில், பன்றி சம்பவ இடத்திலேயே பலியானது.

குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் இருந்த ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர். அக்கம்பக்கத்தினர் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கான்பூர் எஸ்பி (தெற்கு) தீபர் கூறுகையில், ‘குண்டுவெடிப்பு சம்பவத்தில் குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். குண்டு வெடிப்பு சத்தம் அரை கிலோமீட்டர் தூரம் வரை கேட்டுள்ளது. தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரித்து வருகின்றனர். விரிவான விசாரணைக்குப் பிறகுதான் இந்த வெடிப்புக்கான காரணம் தெரியவரும்’ என்றார்.

Tags : UP , The bomb exploded and killed the pig while eating the object lying on the ground; Four people, including a child, were injured in UP
× RELATED பஞ்சுப் போர்வை போல காணப்படும்...