×

வானத்தைப் போல பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்றவர் விஜயகாந்த் : தெலங்கானா ஆளுநர் தமிழிசை வாழ்த்து!!


சென்னை : தேமுதிக தலைவர் திரு. விஜயகாந்த் அவர்களுக்கு தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்களின் பிறந்த நாள் வாழ்த்துச்செய்தியில் கூறியிருப்பதாவது, வானத்தைப் போல பரந்த மனதுடன் இருப்பதால் அனைவரின் அன்பையும், மரியாதையையும் பெற்று புலன் விசாரணை செய்தாலும் எந்த குறையும் கண்டுபிடிக்க முடியாத அன்பின் சகாப்தமாக கேப்டனாக மரியாதையுடன் நெறஞ்ச மனசுடன் வலம் வந்து கொண்டிருக்கும் அண்ணன் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு எனது இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

பூரண உடல் ஆரோக்கியத்தோடு நீண்ட ஆயுளுடன் மக்கள் பணியாற்ற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்,என்று தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் திரு.விஜயகாந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரித்துள்ளார்கள்.மேலும் கேப்டன் விஜயகாந்த் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெலுங்கானா ஆளுநர் டாக்டர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் தெரிவித்துக் கொண்டார்கள்.



Tags : Vijayakanth ,Governor ,Telangana ,sky , Telangana, Governor, Tamil Music, Greetings
× RELATED ஒரே வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்...