×

பிலிப்பைன்சில் பயங்கர குண்டுவெடிப்பு

மணிலா: பிலிப்பைன்சின் சூலோ மாகாணத்தில் ஜோலோ நகரில் நேற்று மதியம் 2 இடங்களில் பயங்கர குண்டுவெடிப்புகள் நடந்தன. முதல் தாக்குதல் மார்க்கெட் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த வெடிகுண்டு வெடித்தது. பின்னர், பாதுகாப்பு பணியில் இருந்த வீரர்கள் மத்தியில் மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. மூன்றாவது வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கப்பட்டது. இந்த பயங்கர குண்டுவெடிப்பில் பெண்கள், குழந்தைகள் என 14 பேர் பலியாயினர். போலீசார், பாதுகாப்பு படையினர் உட்பட 75 பேர் படுகாயமடைந்தனர். எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை.

Tags : Terrorist bombing ,Philippines , In the Philippines, terror, bombing
× RELATED பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை வழங்கிய இந்தியா.!