×

அருண்ஜெட்லி நினைவு தினம் நண்பரை இழந்து வாடுகிறேன்: பிரதமர் மோடி உருக்கம்

புதுடெல்லி: பா.ஜ மூத்த தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அருண்ஜெட்லியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி, டெல்லியில் அவரது உருவப்படத்திற்கு ஜெட்லியின் குடும்பத்தினர், மத்திய அமைச்சர்கள், பாஜ மூத்த தலைவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், ‘‘கடந்த ஆண்டு, இதே நாளில் அருண்ஜெட்லியை இழந்தோம். என் ஆருயிர் நண்பரான அவரின் இல்லாமையை அதிகம் உணர்கிறேன். டாமுயற்சியுடன் இந்தியாவுக்கு உழைத்தவர் அவர். அவரது அறிவு, புத்திசாலித்தனம், ஆளுமை எல்லாம் அவரது வரலாற்றைச் சொல்லும்’’ என்றார். இதே போல, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், பாஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா ஆகியோரும் அருண்ஜெட்லி தொடர்பான தங்களது நினைவுகளைப் பகிர்ந்துள்ளனர்.

Tags : Modi ,Arun Jaitley Memorial Day , Arun Jaitley Memorial Day, Losing Friend, Prime Minister Modi, Melting
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...