×

பாடகர் எஸ்.பி.பி நினைவுடன் உள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தகவல்

சென்னை: பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் நினைவுடன் உள்ளதாக அவரது மகன் எஸ்.பி.பி சரண் தகவல் அளித்துள்ளார். தந்தை எஸ்.பி.பி.யை தாம் சந்தித்ததாகவும் தம்மை அடையாளம் கண்டுகொண்டதாகவும் சரண் தகவல் அளித்துள்ளார். அவரிடம் ஒரு சில வார்த்தைகள் பேசினேன், மக்கள் பிரார்த்தனை செய்ததை கூறினேன் என்று சரண் தெரிவித்தார்.

2 வாரத்துக்கு பிறகு அவரை சந்தித்து பேசினேன் என்று சரண் தெரிவித்துள்ளார். அறையில் இசை ஒலிபரப்பப்பட்டதையும் எஸ்.பி.பி ரசித்தார் என்று சரண் தகவல் அளித்துள்ளார். தமது தாய் குறித்து தந்தை எஸ்.பி.பி விசாரித்ததாகவும் வீடியோ மூலம் சரண் விளக்கமளித்துள்ளார்.

அப்பாவுக்கு கொரோனா இல்லை என்று வெளியான தகவல் வதந்தி என பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் மகன் எஸ்.பி.பி.சரண் கூறி இருந்தார். கொரோனா பாதிப்பு காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் கடந்த இரு வாரங்களாக சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டது. அவர் குணமடைய வேண்டிய திரையுலக பிரமுகர்கள் உள்பட அனைத்து தரப்பினரும், பிரார்த்தனை செய்தனர்.

இதையடுத்து அவரது உடல்நிலை கிரிட்டிக்கலான நிலையிலும், சீராக இருந்து வருவதாகவும், வெண்டிலேட்டர் மற்றும் எக்மோ உதவியுடன் சிகிச்சை அளிக்கப்படுவதுடன், அமெரிக்கா, யுகோ நாடுகளைச் சேர்ந்த பல்வேறு மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையுடன் தொற்று நோய்க்கான தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.



Tags : SBP Charan ,singer ,SBP , spb, corona
× RELATED எஸ்.பி.பி குரலை AI மூலம் பயன்படுத்திய தயாரிப்பாளர்களுக்கு நோட்டீஸ்