×

பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் ரயில்வே ஊழியர்கள் பங்கேற்பு

சென்னை: பிட் இந்தியா சுதந்திர ஓட்டத்தில் தெற்கு ரயில்வே இணைத்துக் கொண்டுள்ளது. இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நாடு முழுவதும் கடந்த 15ம் தேதி 74வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இதையடுத்து வரும் அக்டோபர் மாதம் 2ம் தேதி மகாத்மா காந்தியின் 151வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி  பிட் இந்தியா சுதந்திர ஓட்டம் என்ற இயக்கத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தெற்கு ரயில்வேயும் இந்த இயக்கத்தில் தற்போது இணைந்துக் கொண்டுள்ளது. இதையொட்டி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஜான் தாமஸ், ரயில்வே ஊழியர்கள் அனைவரும் இதில் தங்களை இணைத்து கொள்ள வேண்டும் என்று ஊக்கப்படுத்தியதுடன், தன் இல்லத்தில் இருந்து மனைவி பினா ஜானுடன் பிட் இந்தியா சுதந்திர ஓட்டத்தில் ஈடுபட்டார். அதைப்போன்று தெற்கு ரயில்வேயில் உள்ள 6 கோட்டத்திலும் உள்ள ரயில்வே பணியாளர்கள் சுதந்திர ஓட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : Pit India, Independence Flow, Railway Employees, Participation
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...