×

கடலூரில் மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்ற விவசாயி மீது கண்டெய்னர் லாரி மோதி விபத்து: நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியீடு..!!

கடலூர்: கடலூர் மாவட்டம் பட்டாப்பக்கம் அருகே லாரி மோதி விவசாய தம்பதி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கடலூர் மாவட்டம் பட்டாப்பக்கம் பகுதியை சேர்ந்தவர் விவசாயி சக்திவேல். இவரது உறவினர் திருமணம் இன்று புதுச்சேரி கிராமப்பகுதியான வடக்குப்பத்தில் நடைபெற்றது. இதில் மனைவி பானுமதியுடன் பங்கேற்பதற்காக தனது மோட்டார் வாகனத்தில் சக்திவேல் திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். அங்கு திருமண நிகழ்ச்சி முடித்துவிட்டு தனது மனைவி பானுமதியுடன் சொந்த ஊரான கடலூருக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நெட்டப்பாக்கம் கல் மண்டகம் அருகே இருக்கும் தனியார் தொழிற்சாலை அருகே சென்று கொண்டிருக்கும் போது அவர்களது பின்புறம் வந்த கண்டெய்னர் லாரி ஒன்று எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் கீழே விழுந்த சக்திவேல் மீது லாரி ஏறி, இறங்கி அவர் சம்பவ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

சிறு காயத்துடன் அவரது மனைவி உயிர்தப்பினார். கண் முன்னே கணவர் உயிரிழந்ததை கண்ட பானுமதி கதறி அழுதார். இந்த தகவல் அறிந்த விவசாய தம்பதியின் உறவினர்கள் அப்பகுதியில் முற்றுகையிட்டனர். தங்களுக்கு உரிய நீதி கிடைக்கும் வரை உடலை எடுக்க சம்மதிக்க மாட்டோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். தொடர்ந்து தெற்கு பகுதி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் முடிவில் கிட்டத்தட்ட 6 மணி நேரத்திற்கு பிறகு சக்திவேல் உடலை போக்குவரத்து போலீசார் கைப்பற்றி அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே கண்டெய்னர் லாரி மோதி விபத்தில் சிக்கி சக்திவேல் பலியான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Cuddalore , Cuddalore, wife, motorcycle, farmer, container, accident
× RELATED வரதட்சணை கொடுமை வழக்கில்...