×

மின்கம்பத்தில் லாரி மோதி விபத்து: இரு சக்கர வாகனங்கள் சேதம்

திருப்பூர்: திருப்பூருக்கு பனியன் துணிகள் ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி மின்கம்பத்தில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், சாலையோரமாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் மின்கம்பங்கள் சேதமடைந்தது. திருச்சியிலிருந்து திருப்பூரை சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்திற்கு பனியன் துணிகளை ஏற்றி வந்த கன்டெய்னர் லாரி ஒன்று காங்கேயம் சாலை வழியாக நேற்று திருப்பூர் வந்து கொண்டிருந்தது. அப்போது, நல்லூர் அருகே வந்தபோது லாரி நிலை தடுமாறி மின்கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளானது.  

இதில் நல்லூர் அருகே சில கடைகளின் முன் பக்கம் சேதமடைந்ததுடன் அங்கு சாலை ஓரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 3 இருசக்கர வாகனங்களும் சேதமடைந்தன . மேலும் லாரி மின்கம்பத்தில் மோதியதில் மின்கம்பம் வளைந்து அப்பகுதியில் மின்தடை ஏற்பட்டது.
இதுகுறித்து, தகவல் அறிந்த ரூரல் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கிரேன்  உதவியுடன் லாரியை அப்புறப்படுத்தினார்கள். இத்தகைய விபத்துக்கு காரணமான லாரி  ஓட்டுநர் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர் குறித்த விசாரணையை  போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags : Electric pole, truck, accident, two-wheeler
× RELATED 10, பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு...