திருச்சி : திருச்சி அடுத்து கல்லணை சாலை சர்க்கார் பாளையம் பனையங்குறிச்சி பகுதியில் கரிகால சோழனால் கட்டப்பட்ட காசி விசாலாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ காசி விசுவநாதர் சன்னதியில் ஆண்டுதோறும் ஆவணி மாதத்தில் மூன்று நாட்கள் சூரிய உதயத்தின் போது சூரியக்கதிர் நேரடியாக சிவன் மீதுபடும் இந்நிகழ்ச்சியை காண பல்வேறு பகுதியிலிருந்து இருந்தும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் கொரேனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள சிலர் பக்தர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.