×

ஈரோடு கலெக்டருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா பரிசோதனை

ஈரோடு: ஈரோடு கலெக்டருடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அதிகாரிகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.  ஈரோடு  கலெக்டர் கதிரவனுக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று உறுதியானதையடுத்து  வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொண்டார். கடந்த 4 நாட்களுக்கு  முன்பு மொடக்குறிச்சி அருகே நடைபெற்ற விழாவில் கலெக்டருடன் அமைச்சர்கள்  செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், எம்.எல்.ஏ.க்கள் ராமலிங்கம், தென்னரசு,  சிவசுப்பிரமணி மற்றும் மின்வாரிய அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தற்போது கலெக்டருக்கு கொரோனா  உறுதியானதையடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளுக்கு  நேற்று முன்தினம் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை மேற்கொண்டவர்களில் யாருக்கும் பாதிப்பு  இல்லை என்று தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.   இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘கலெக்டருடன் தொடர்பில்  இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில்  யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. தொற்று ஏற்பட்ட நபரிடம் தொடர்பில்  இருந்தவருக்கு பாதிப்பு வர குறைந்தது 4 நாட்கள் ஆகும். எனவே அதன்பிறகு  பரிசோதனை செய்தால்தான் பாதிப்பு நிலை தெரியவரும். ஆனாலும்  முன்னெச்சரிக்கையாக தற்போது பரிசோதனை செய்யப்பட்டுள்ளது’’ என்று கூறினர்.

Tags : inspection ,ministers ,Erode Collector ,Corona , Corona inspection , ministers, MLAs ,touch , Erode Collector
× RELATED பட்டா பெறுவதற்கு 5 அமைச்சர்கள் கொண்ட...