சென்னை: கொரோனா தொற்று காரணமாக கடந்த 5ம் தேதி சென்னை சூளைமேடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு தொடர்ந்து வென்டிலேட்டர், எக்மோ கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து நேற்று மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ‘’எஸ்.பி.பிக்கு தொடர்ந்து எக்மோ கருவி உதவியுடன், வெளிநாட்டு மருத்துவர்களின் ஆலோசனைப்படி தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது’’ என்று கூறப்பட்டுள்ளது.