சென்னை: பேரிடர்கள் பல கடந்து வந்த சென்னை கொரோனா பேரிடரிலிருந்து விரைவில் மீண்டுவரும் என முதல்வர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். வந்தோரை வாழவைக்கும் தமிழகத்தின் தைனகரான சென்னை தோற்றுவிக்கப்பட்ட தினம் இன்று என முதல்வர் கூறினார். கனவுகளோடு நாடி வந்தவர்களுக்கு முகவரி தேடித் தந்த சென்னைக்கு வயது 382 என முதல்வர் பழனிசாமி பெருமிதம் கொண்டார்.