×

மின்சாரம் பாய்ந்து சிறுவன் பலி

புழல்: சென்னை புழல் கண்ணப்பசாமி நகர் பத்தாவது தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவரது மகன் பிரசாந்த் (16). செங்குன்றம் பனையத்தம்மன் கோயில் தெருவில் ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் பணியாற்றினார். நேற்று இரவு விளம்பர பேனர் வைத்தபோது, மேலே சென்ற உயர் அழுத்த மின்சார கம்பியில் விளம்பர பலகை உரசியது. மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட பிரசாந்த் பலியானார்.  தகவல் அறிந்த செங்குன்றம் போலீசார் சடலத்தை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags : electrocution, kills boy
× RELATED மாமல்லபுரம் அருகே ₹4,276.44 கோடியில்...