×

சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டதால் பரபரப்பு...!!

சென்னை: சென்னை வேளச்சேரியைச் சேர்ந்த பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் சுற்றிவளைக்கப்பட்டு என்கவுண்டர் செய்யப்படுவதும் கைது செய்யப்படுவதுமான சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றன. இன்று காலையில் சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கர் என்பவர் என்கவுண்டர் செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, சென்னை அயனாவரத்தில் ரவுடி சங்கரை போலீசார் என்கவுன்ட்டர் செய்த நிலையில், சென்னை வேளச்சேரியில் சேர்ந்த பிரபல ரவுடி திருவேங்கடம் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருமண விழா ஒன்றில் கலந்து கொள்வதற்காக ரவுடி திருவேங்கடம் வந்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனை அடுத்து அந்த திருமண மண்டபத்தை சுற்றி வளைத்த போலீசார் அந்த திருமண விழாவில் கலந்து கொள்ள வந்திருந்த ரவுடி திருவேங்கடத்தை கைது செய்தனர்.

மேலும், இன்று காலை ரவுடி சங்கர் போலீஸாரால் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் மற்றொரு ரவுடி திருவேங்கடம் கைது செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Chennai Velachery ,Thiruvenkadam , Chennai Velachery, Famous Rowdy Thiruvenkadam, arrested
× RELATED திருவேங்கடம் அருகே நேற்றிரவு...