×

உடல் ஆரோக்கிய விழிப்புணர்வு தக்காளி, முட்டை மீது அமர்ந்து சிறுவன்

திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் உடல் ஆரோக்கிய விழிப்புணர்வை வலியுறுத்தி, 4 வயது சிறுவன் முட்டை மற்றும் தக்காளி மீது அமர்ந்து யோகாசனம் செய்தார். திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் அரிகோவிந்தன். இவரது மகன் தர்ஷன்(4). யுகேஜி மாணவர். இவர் கடந்த ஓராண்டாக யோகா பயிற்சி பெற்று வருகிறார். இந்நிலையில், உடல் ஆரோக்கிய விழிப்புணர்வை வலியுறுத்தி, தக்காளி  மற்றும் முட்டைகளை அடுக்கி வைத்து அதன்மீது சுமார் 15 நிமிடம் அமர்ந்தபடி யோகாசனம் செய்தார். தொடர்ந்து 15 நிமிடம் தக்காளி மற்றும் முட்டை மீது அமர்ந்திருந்தும் அவை சேதமடையவில்லை. முறையான மூச்சுப்பயிற்சியும், ேயாக நிலையும் மேற்கொள்வதால், இவை சாத்தியமாவதாக பயிற்சியாளர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : Kid ,Tiruvannamalai , Tiruvannamalai,Tomato ,Egg ,Yogasanam,Health awarness
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்களின்...