×

ஸ்டெர்லைட் ஆலை மூடிய விவகாரம் வைகோ கேவியட் மனு

சென்னை: .தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு சீல் வைத்தற்கு எதிராக வேதாந்த நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரிய வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கையை நிராகரித்தது. அதுதொடர்பான மனுவை தள்ளுபடி செய்தது. இதை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதால், தமிழக அரசு உட்பட ஆலை எதிர்பாளர்கள் அமைப்புகள் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில், மேற்கண்ட விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று கேவியட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.


Tags : Sterlite plant, closed affair, waiko, caveat petition
× RELATED தாம்பரம் மாநகராட்சி பகுதி...