×

அனைவராலும் ரசிக்கப்படும் பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் உடல்நலம் தேற பிரார்த்திக்கிறேன்: மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் ட்வீட்

புதுடெல்லி: பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் உடல்நலம் தேற பிரார்த்திக்கிறேன் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன்  கூறியுள்ளார். மிகப்பெரிய பாடகராக இந்தியா முழுவதும் அறியப்படும் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். இந்த நிலையில், அவருக்காக பல்வேறு பிரார்த்தனைகள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் பெற வேண்டும் என்று அரசியல் தலைவர்கள், திரை உலக நட்சத்திரங்கள் என அனைத்து தரப்பினரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். தொடர்ச்சியாக அவர்  உடல்நலம் பூரண குணமடைய வேண்டும் என்ற அடிப்படையில் பல விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், விரைவில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். கிட்டத்தட்ட 50 ஆண்டுகால திரையுலகத்தில் பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி பலகோடி ரசிகர்களை கொண்ட பாடகர் என்ற மிகப்பெரிய வரவேற்பு அவருக்காக காத்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அனைவராலும் ரசிக்கப்படும் பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியம் விரைவில் உடல் நலம் தேறவும்  நல்ல ஆரோக்கியம்  பெறவும் நான் பிரார்த்திக்கிறேன்.  கொரோனாவுக்கு எதிராக களத்தில் நின்று பணியாற்றும் முன்கள பணியாளர்கள் சமூகத்தில் பிரச்சினைகளை எதிர்கொண்ட போது,  அவர்களின் மன உறுதியை ஊக்கப்படுத்தும் வகையில் இதயத்தை தொடும் பாடலை வீடியோவாக எஸ்.பி.பாலசுப்பிரமணியம் வெளியிட்டார், என்று கூறியுள்ளார்.



Tags : Singer SB Balasubramaniam ,Union Minister ,Harshwardhan ,recovery , SB Balasubramaniam, Union Minister Harshwardhan, Corona
× RELATED சொத்து விவரங்கள் மறைத்த ஒன்றிய...