சென்னை: வங்கக்கடலில் ஒடிசா-வட வங்கதேசம் இடையே ஆகஸ்ட் 23 ம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழகத்திற்கு மழை வாய்ப்பு ஏதும் இல்லை என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.