×

காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் 3 இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை: மாநில டிஜிபி தில்பாக் சிங் தகவல்.!!!

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் 3  இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்  கொல்லப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் லஷ்கர் இ தொய்பாவின் முக்கியத் தளபதி உள்பட 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதில், குப்வாரா மாவட்டம் கனிபோரா கிரல்குண்ட் பகுதியில் தீவிரவாதிகள் மறைந்திருந்த பழத்தோட்டத்தில் அதிரடியாக புகுந்த இந்திய ராணுவ படையினர் பயங்கரவாதிகளை சுற்றி வளைத்தனர். இந்த தாக்குதலில் நீண்ட நேரம் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டைக்குப் பின் 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதேபோன்று, சோபியான் மாவட்டம் சித்ரகாம் கிராமத்தில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொல்லப்பட்டான். அப்பகுதியில் மேலும் சில பயங்கரவாதிகள்  பதுங்கியிருக்கலாம் என்பதால் தேடுதல் வேட்டையில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.   இது குறித்து காஷ்மீர் டிஜிபி தில்பாக் சிங் கூறியதாவது: காஷ்மீரில் கடந்த 4 நாட்களில் 3 வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் 6 பயங்கரவாதிகள்  கொல்லப்பட்டுள்ளனர்; கொல்லப்பட்டவர்களில் 4 பேர் காஷ்மீரின் டாப்-10 பயங்கரவாதிகள் என்று தகவல் தெரிவித்துள்ளார்.

Tags : terrorists ,DGP Dilbak Singh 6 ,attacks ,Kashmir ,State ,Jammu , 6 terrorists shot dead in 3 attacks in Jammu and Kashmir in last 4 days: State DGP Dilbak Singh
× RELATED ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில்...