டெல்லி : சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற தோனிக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியுள்ளார்.இந்திய கிரிக்கெட்டுக்கு தோனி ஆற்றி உள்ள பங்களிப்பை மக்கள் என்றும் நினைவு கூர்வர் என்றும் தோனியின் ஓய்வு அறிவிப்பை கேட்டு 130 கோடி மக்களும் ஏமாற்றம் அடைந்ததாகவும் மோடி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.நாம் எங்கு செல்கிறோம் என்பது நமக்கு தெரியும் வரை நாம் எங்கிருந்து வந்தோம் என்பது முக்கியமில்ல என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார்.