×

பாடும் நிலா...எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்...எஸ்.பி.பி.யை மீட்டெடுப்போம்!: நடிகர் ரஜினிகாந்த் அழைப்பு..!!

சென்னை: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கக்கூடிய நிலையில், திரையுலகினர் இன்று மாலை 6:00 மணி முதல் 6:05 மணி வரை கூட்டுப் பிரார்த்தனை நடத்த அழைப்பு விடுத்துள்ளனர். இந்நிலையில் பாடும் நிலா ... எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்... என்று நடிகர் ரஜினிகாந்த் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுவதில் அனைவரும் கலந்துக்கொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.

 மிகப்பெரிய பாடகராக இந்தியா முழுவதும் அறியப்பட்ட எஸ்.பி.பி. அவர்கள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார். இந்த நிலையில், அவருக்காக பல்வேறு பிரார்த்தனைகள் நாடு முழுவதும் செய்யப்பட்டு வருகிறது. தொடர்ச்சியாக அவர்  உடல்நலம் பூரண குணமடைய வேண்டும் என்ற அடிப்படையில் பல விஷயங்கள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்னர் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள், விரையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும். கிட்டத்தட்ட 50 ஆண்டுகால திரையுலகத்தில் பல்வேறு மொழிகளில் பாடல்களை பாடி பலகோடி ரசிகர்களை கொண்ட பாடகர் என்ற மிகப்பெரிய வரவேற்பு அவருக்காக காத்திருப்பதாக தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று பாடும் நிலா ... எழுந்து வா! கூட்டுப் பிரார்த்தனை செய்வோம்... எஸ்.பி.பி. - யை மீட்டெடுப்போம் என்ற ஹாஸ்டேக்கை உருவாக்கி ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் அடிப்படையில் இன்று மாலை 6:00 மணிக்கு தொடங்கி 6:05 மணி வரை அவருக்காக ஒட்டுமொத்தமாக நாம் கூட்டுப் பிரார்த்தனை செய்வோம் என்று நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் ரசிகர்களுக்கும், திரையுலகத்தினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : Rajinikanth ,SBP ,SBP - Let , Singing moon ... get up! Let's pray together ... SBP - Let's restore !: Actor Rajinikanth's call .. !!
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...