சென்னை : நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்படும் மத்திய அரசு பணியிடங்களில் 90% பணிகள் தமிழர்களுக்கே ஒதுக்கும் வகையில் சட்டமியற்றப்படும் என சீமான் தெரிவித்துள்ளார்.மேலும் கல்வி, கலாச்சாரம், பொருளாதாரம், வேலைவாய்ப்புகளை அந்தந்த மாநிலங்களே பார்த்துக் கொள்ளட்டும் என்றுதான் மாநிலங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டன என்றும் ஆனால் தற்போது மாநிலங்களின் எல்லா உரிமைகளையும் தன்வசம் எடுத்துக்கொள்ள மத்திய அரசு துடிப்பது வேடிக்கையானது என்றும் சீமான் தெரிவித்துள்ளார்.