வாஷிங்டன் : நிறவெறிக்கு எதிரான தடுப்பு மருந்து இல்லை என்று ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் கருத்து தெரிவித்துள்ளார்.அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ், நிறவெறி குறித்து இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை நிலைக்காட்ட ஜனநாயகக் கட்சி பாடுபடும் என்றும் அனைவரும் சுதந்திரம் கிடைக்காத வரை நாமும் சுதந்திரமானவர்களாக இருக்க முடியாது என்றும் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.