வேலூர் : பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், கொரோனாவை பரவலை தடுக்கும் நோக்கில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்க, ஊர்வலம் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் நாடு முழுவதும் மதம் சார்ந்த விழாக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.