×

பேஸ்புக்கில் மோசடி வாலிபர் கைது

சென்னை: கீழ்ப்பாக்கம் பர்னபி சாலையை சேர்ந்தவர் பிரவீன் கடலோயா (49). இவர், வேப்பேரி காவல்நிலையத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில், எனது மனைவி ராக்கி கடலோயாவிடம் பேஸ்புக் மூலம் சூளை ஹன்டர்ஸ் சாலையை சேர்ந்த திலீப் (28) என்ற நபர் அறிமுகமானார். பிறகு நண்பர்களாக பழகி எனது குடும்பத்தினரிடம் அறிமுகமாகி நன்றாக பழகி வந்தார். தனக்கு புது வியாபாரம் செய்ய பணம் தேவைப்படுவதால் கடனாக ரூ.2.75 லட்சம் கேட்டுள்ளார். அதன்படி கடந்த ஜனவரி 20ம் தேதி பிரவீன் கடலோயா மனைவி பணம் கொடுத்துள்ளார். அதன்பிறகு போன் செய்தால் திலீப் போனை எடுக்காமல் துண்டித்து வருகிறார். எனவே சம்பந்தப்பட்ட நபரிடம் இருந்து பணத்தை பெற்று தர வேண்டும் என புகாரில் கூறியிருந்தார். போலீசார் நேற்று முன்தினம் இரவு திலீப்பை கைது செய்தனர்.விசாரணையில் இவர் பல பெண்களை ஏமாற்றியது தெரியவந்தது.

Tags : Fraudster , Facebook, fraud, teenager, arrested
× RELATED ரஷ்யாவில் படிப்புக்காக அனுப்பிய ₹7...