×

திருச்சியை இரண்டாவது தலைநகராக்க வேண்டும்: அமைச்சர் திடீர் போர்க்கொடி

திருச்சி: தமிழகத்தின் 2-வது தலைநகராக மதுரையை மாற்ற வேண்டும் என்று அந்த மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் போர்க்கொடி தூக்கினர். இந்நிலையில், திருச்சியில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது: திருச்சியை தமிழகத்தின் இரண்டாவது தலைநகராக்க வேண்டும் என்பது மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் கனவு. திருச்சியில் அனைத்து வளங்களும் உள்ளது. தற்போது மீண்டும் தமிழகத்தில் இரண்டாவது தலைநகரம் என்கிற கோரிக்கை எழுந்தால் திருச்சியைதான் இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் கவனத்துக்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Trichy ,Minister , Trichy, Second Capital, Minister, Battle Flag
× RELATED திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் அருகே...