சேலம்: சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டியில் பைக் மீது லாரி மோதி அரசு ஊழியர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த வாழப்பாடியை சேர்ந்த கார்த்திகேயன்(45) மேச்சேரி போரூராட்சி அலுவல கணக்கராக பணியாற்றியவர். ஊரடங்கால் பேருந்து வசதி இல்லாததால் 120 கி.மீ தூரம் கார்த்திகேயன் பைக்கில் அலுவலகம் சென்று வந்துள்ளார்.