தூத்துக்குடி: வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடலுக்கு அதிகாரிகள் வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர். சுப்பிரமணியன் உடலுக்கு தெண்மணடல ஐஜி முருகன், டிஜிபி திரிபாதி உள்ளிட்ட அதிகாரிகள் வீரவணக்கம் செலுத்தினர். வெடிகுண்டு வீச்சில் உயிரிழந்த காவலர் சுப்பிரமணியன் உடல், அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் பண்டாரவிளைக்கு கொண்டு வரப்பட்டது. காவலர் வீட்டில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.