டெல்லி: இந்திய கடற்படை எத்தகைய சவால்களையும் சந்திக்கும் திறன் கொண்டது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். பதற்றமான பகுதிகளில் கப்பல்களை நிறுத்தி மனிதநேய அவசர உதவிகளை செய்ய கடற்படை தயார் எனவும் தெரிவித்துள்ளார். இந்திய கடற்படை கமாண்டர்களின் மாநாட்டை டெல்லியில் தொடக்கி வைத்து ராஜ்நாத் சிங் பேசி வருகிறார்.