சென்னை : சுற்றுச்சூழல் மதிப்பீடு வரைவு அறிக்கையை செயல்படுத்த தற்போது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இஐஏ வரைவறிக்கையை தமிழில் மொழிபெயர்க்க கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது. வரைவு அறிக்கைக்கு தடை கோரிய வழக்கு செப்டம்பர் 8ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.