சென்னை: தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் காவலர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தூத்துக்குடியில் காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது எனவும் கூறினார். காவலர்கள் கொல்லப்படும் சம்பவம் தொடராமல் அவர்கள் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.