×

இலுப்பூர், அன்னவாசலில் மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி

இலுப்பூர் : இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதியில் நேற்று மாலை திடீரென கோடை மழை பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதியில் கடந்த வருடம் பெய்த பருவமழைக்கு பிறகு மழை பெய்யவில்லை. பொதுமக்கள் கோடைவெயிலினால் மிகவும் அவதியுற்று வந்தனர்.சிறிய குளங்களில் நீர் வற்றி போயின. மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் கோடை மழை பெய்த நிலையில் இலுப்பூர் மற்றும் அன்னவாசல் பகுதியில் பெய்ய வில்லை. ஆங்காங்கே சில தினங்களுக்கு முன்பு தூறல் மழை பெய்தது. இந்நிலையில் நேற்று மாலை திடீர் என கருமேக கூட்டங்கள் கூடின. குளிர்ந்த காற்றுடன் மழை பெய்தது. மழை அரை மணி நேரம் பெய்ததால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்….

The post இலுப்பூர், அன்னவாசலில் மழை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Anvasal, ,Ilipur ,Lilapur ,Lilipur ,Anvasal ,Ilapur ,Dinakaran ,
× RELATED அம்மிக்கல்லை தலையில் போட்டு காதல் மனைவி கொலை: கணவன் வெறிச்செயல்