×

மதிமுக ஆர்ப்பாட்டம்

ஆவடி: மத்திய அரசின் தேசிய கல்வி கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி வில்லிவாக்கம் ஒன்றியம், அயப்பாக்கம் ஊராட்சியில் மதிமுக சார்பில் நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திருவள்ளூர் மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் எஸ்.எஸ்.பெருமாள் தலைமை தாங்கினார். கட்சி தொண்டர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இதில், தலைமை பொதுக்குழு உறுப்பினர் பாலரகுபதி, வில்லிவாக்கம் ஒன்றியச் செயலாளர் ஜி.பி.ராஜா கண்டன உரையாற்றினர். இதில், பலர் கலந்து கொண்டனர்.

Tags : demonstration , Madhyamaka, demonstration
× RELATED காங்.கட்சியினர் ஆர்ப்பாட்டம்