×

பள்ளிப்பட்டு பகுதியில் கொட்டித் தீர்த்த கன மழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு பகுதியில் நேற்று பெய்த கனமழையால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால், நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. மேலும், ஆந்திர மேற்கு தொடர்ச்சி காடுகளில் பெய்து வரும் கன மழைக்கு கிருஷ்ணாபுரம் அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால், உபரி நீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளிப்பட்டு சுற்று வட்டார பகுதிகளில் நேற்று சுமார் ஒரு மணி நேரம் கன மழை கொட்டி தீர்த்தது. இதனால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பருவ மழை தொடர்ந்து பெய்து வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags : area ,Roads ,Pallipattu , Pallipattu area, heavy rains, flooding of roads
× RELATED பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில்...